என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் மந்திரியின் பாதுகாப்பு வாகனத்தில் மோதிய முன்னாள் மந்திரியின் கார்
Byமாலை மலர்29 July 2021 9:06 PM GMT (Updated: 29 July 2021 9:06 PM GMT)
உப்பள்ளிக்கு வந்த முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குசுமாவதி எம்.எல்.ஏ. பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
உப்பள்ளி:
கர்நாடக மாநில புதிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று உத்தர கன்னடா மாவட்டத்தில் வெள்ள சேதங்களைப் பார்வையிட வந்தார். இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு வந்தார். அங்கிருந்து அவர் கார் மூலம் உத்தர கன்னடா மாவட்டத்திற்கு சென்றார்.
முன்னதாக, முதல் மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். அவருடன் முன்னாள் மந்திரி சிவராம் ஹெப்பார் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் காரில் சென்றனர்.
முதல் மந்திரியின் காரை பின்தொடர்ந்து சிவராம் ஹெப்பாருக்கு சொந்தமான காரும் சென்றது. அவர்கள் கோகுல் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது சிவராம் ஹெப்பாருக்கு சொந்தமான கார், முதல் மந்திரியின் பாதுகாப்பு வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதனால் அந்த காரின் முன்பக்கம் சேதம் அடைந்தது.
இதில் அந்த காரில் இருந்த 4 பேர் லேசான காயம் அடைந்தனர். சிவராம் ஹெப்பார், முதல் மந்திரியின் காரில் இருந்ததால் அவர் காயமின்றி தப்பினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X