என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கவில்லை எங்கள் கடமையைத்தான் செய்கிறோம் - ராகுல்காந்தி
Byமாலை மலர்29 July 2021 12:21 AM GMT (Updated: 29 July 2021 4:21 AM GMT)
பெகாசஸ் உளவு பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் அல்லது மத்திய உள்துறை மந்திரி முன்னிலையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தநிலையில், இக்குற்றச்சாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கவில்லை. தங்கள் கடமையைத்தான் செய்கின்றன. ‘பெகாசஸ்’ உளவு விவகாரம், எங்களை பொறுத்தவரை தேசியம், தேசதுரோகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும். இது, தனியுரிமை தொடர்புடையது.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. ‘பெகாசஸ்’ மென்பொருளை வாங்கினீர்களா? இந்தியர்களை உளவு பார்த்தீர்களா? என்றுதான் கேட்கிறோம்.
இந்த பிரச்சினையில், இந்திய ஜனநாயகத்தின் ஆன்மா மீது பிரதமரும், மத்திய உள்துறை மந்திரியும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
ஆகவே, ‘பெகாசஸ்’ உளவு பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் அல்லது மத்திய உள்துறை மந்திரி முன்னிலையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. இதில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது இம்ரான்கான் கட்சி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X