search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகேஷ் திகாயத்
    X
    ராகேஷ் திகாயத்

    லக்னோ செல்லும் சாலைகளை முடக்குவோம் - உ.பி. அரசுக்கு விவசாய சங்கம் எச்சரிக்கை

    டெல்லியில் செய்ததுபோல் லக்னோ செல்லும் சாலைகளையும் முடக்குவோம் என விவசாய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    லக்னோ:

    மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லைகளில் முகாமிட்டு 8 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    டெல்லி-உத்தர பிரதேச எல்லையான காஜிப்பூரில் போராட்டம் நடத்திவரும் பாரதிய கிசான் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் நேற்று லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும்வரை விவசாயிகள் போராட்டம் ஓயாது. டெல்லியை போல், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவையும் மாற்றுவோம். அதாவது, லக்னோவுக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் முடக்குவோம்.

    உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தல்களுக்கு முன்பு அம்மாநிலங்களில் மிகப்பெரிய விவசாயிகள் போராட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×