என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்
Byமாலை மலர்24 July 2021 7:54 AM GMT (Updated: 24 July 2021 7:54 AM GMT)
கேரளத்தில் தொடர் மழையால் நீர் நிலைகள் உயர்ந்து வருவதால் கல்லர்குட்டி அணையில் உபரிநீர் திறக்கப்பட்டது.
கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து, ஜூலை 26 வரை அங்கு மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது
இடுக்கி மாவட்டத்தில் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. மாவட்டத்தின் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் காஞ்சியார், கட்டப்பனா, வந்தன்மேடு, அனக்கரா உள்ளிட்ட பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் 23 ஆம் தேதி வரையில் 98.81 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இவை கடந்த ஆண்டு பெய்த 46.43 சென்டி மீட்டர் மழையை விட இருமடங்காகும்.
கேரளத்தில் தொடர் மழையால் நீர் நிலைகள் உயர்ந்து வருவதால் கல்லர்குட்டி அணையில் உபரிநீர் திறக்கப்பட்டது. முன்னதாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததை அடுத்து பெரியார் ஆற்றின் கரைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மாவட்ட அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தியுள்ளனர். இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ், பொதுமக்கள் யாரும் இரவில் பயணம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்ற ஆண்டு பருவமழையின் போது இடுக்கி மாவட்டத்தில் ராஜமலை பெட்டிமுடி எஸ்டேட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 20 வீடுகள் மண்ணில் புதைந்தன. இதனால் 70 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இடுக்கி மாவட்டத்தில் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. மாவட்டத்தின் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் காஞ்சியார், கட்டப்பனா, வந்தன்மேடு, அனக்கரா உள்ளிட்ட பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் 23 ஆம் தேதி வரையில் 98.81 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இவை கடந்த ஆண்டு பெய்த 46.43 சென்டி மீட்டர் மழையை விட இருமடங்காகும்.
கேரளத்தில் தொடர் மழையால் நீர் நிலைகள் உயர்ந்து வருவதால் கல்லர்குட்டி அணையில் உபரிநீர் திறக்கப்பட்டது. முன்னதாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததை அடுத்து பெரியார் ஆற்றின் கரைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மாவட்ட அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தியுள்ளனர். இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ், பொதுமக்கள் யாரும் இரவில் பயணம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்ற ஆண்டு பருவமழையின் போது இடுக்கி மாவட்டத்தில் ராஜமலை பெட்டிமுடி எஸ்டேட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 20 வீடுகள் மண்ணில் புதைந்தன. இதனால் 70 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X