என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆபாச பட வழக்கில் கணவர் கைது - நடிகை ஷில்பா ஷெட்டியிடம் போலீசார் விசாரணை
Byமாலை மலர்23 July 2021 11:26 PM GMT (Updated: 23 July 2021 11:55 PM GMT)
ராஜ் குந்த்ராவின் வியான் இன்டஸ்ட்டிரிஸ் நிறுவன இயக்குனராக நடிகை ஷில்பா ஷெட்டி செயல்பட்டதால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
மும்பை:
மும்பையில் பெண்களை ஆபாச படம் எடுத்து அதனை செல்போன் செயலியில் வெளியிட்ட வழக்கில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ்குந்த்ரா (45), மும்பை குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த 19-ம் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் வழக்கில் முக்கிய குற்றவாளி என்றும் போலீசார் தெரிவித்தனர். போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், ஆபாச பட வழக்கில் தொடர்பு குறித்து போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று மதியம் புறநகர் ஜூகுவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றனர். மேலும், அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த மடிக்கணினி ஒன்றை கைப்பற்றினர்.
இதற்கிடையே, நேற்று ராஜ் குந்த்ராவின் போலீஸ் காவலை வரும் 27-ம் தேதி வரை நீட்டித்து மும்பை கோர்ட்டு உத்தரவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X