search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாம்பை வீட்டுக்குள் விடாமல் காவல் காத்த பூனை
    X
    பாம்பை வீட்டுக்குள் விடாமல் காவல் காத்த பூனை

    பாம்பை வீட்டுக்குள் விடாமல் காவல் காத்த கெட்டிக்காரப் பூனை - வைரல் புகைப்படம்

    கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் வரை பாம்பை, பூனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பின்னர், மீட்பு படையினர் பாம்பை பிடித்து சென்றனர்.
    புவனேஸ்வர்:

    செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த பூனை ஒன்று, பாம்பை வீட்டுக்குள் நுழையவிடாமல் தடுக்கும் சம்பவம் வைரல் ஆகி வருகிறது.

    ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் வீட்டின் உரிமையாளர் வெளியே சென்றிருந்த நிலையில் ஒன்றரை அடி நீள நல்ல பாம்பு ஒன்று வீட்டுக்குள் நுழையப் பார்த்தது. இதைப் பார்த்த  வீட்டுப் பூனை, கொடிய விஷம் நிறைந்த பாம்பை துணிச்சலுடன் வேறு எங்கும் நகரவிடாமல் வாசலிலேயே தடுத்து சிறைப்பிடித்து வைத்திருந்தது.

    பூனையிடம் பாம்பு செய்தவறியாது திகைத்துபோய் நின்றது.

    கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் வரை பாம்பை, பூனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.  இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர், பாம்பை பிடித்து காட்டுக்குள் விட்டுள்ளனர்.

    இந்த பூனையை நாங்கள் எங்கள் வீட்டில் ஒருவராகவே வளர்த்து வருகிறோம் என்று அதன் உரிமையாளர் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.
     
    மேலும் இது பற்றி சமூக ஊடகங்களில் பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
    Next Story
    ×