என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் உளவுபார்த்தல் சாத்தியமில்லை -பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி விளக்கம்
Byமாலை மலர்19 July 2021 2:08 PM GMT (Updated: 19 July 2021 2:08 PM GMT)
பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி இந்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் படேல் ஆகியோரின் செல்போன் உரையாடல்கள் பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி ஒட்டுகேட்கப்பட்டதாக தகவல் வெளியானது. 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கரின் செல்போன்களும் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்தி வெளியானது.
இது தொடர்பாக மக்களவையில் இன்று தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். அப்போது, பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி இந்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என்று கூறினார்.
‘எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றாகத் தெரியும், இந்தியாவில் சட்டவிரோதமாக உளவுபார்த்தல் என்பது சாத்தியமல்ல, இந்தியாவில் அங்கீகாரமற்ற கண்காணிப்பு ஒருபோதும் நடைபெறாது. பாராளுமன்றம் கூடுவதற்கு ஒருநாள் முன்னதாக பரபரப்பான செய்திகள் வெளியாவது தற்செயலானது அல்ல’ என மத்திய மந்திரி குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X