என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி சென்றடைந்த தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
Byமாலை மலர்18 July 2021 4:13 PM GMT (Updated: 18 July 2021 4:13 PM GMT)
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
புதுடெல்லி:
இந்நிலையில், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினை, தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு சால்வை அணிவித்து வரவேற்றார். அவருடன் தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதி மாறன், திருச்சி சிவா உள்ளிட்டோர் இருந்தனர். அதன்பின்பு முதல்-அமைச்சர் ஸ்டாலின் காரில் புறப்பட்டு சென்றார்.
ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் முக ஸ்டாலின், நாளை பகல் 12 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஜனாதிபதியுடனான முதல் சந்திப்பு இதுவாகும்.
கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட முடிவு செய்துள்ளது. கர்நாடக அரசின் இந்த புதிய அணை திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில், இரு மாநில அரசுகளும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றன.
இந்த சூழலில், தமிழ்நாட்டின் அனைத்து கட்சி தலைவர்கள் அடங்கிய குழு டெல்லி புறப்பட்டு சென்றது. இந்த குழு தமிழக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட்டது.
அவர்களைத் தொடர்ந்து கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி சென்றார். அவர் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் முக ஸ்டாலின், நாளை பகல் 12 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஜனாதிபதியுடனான முதல் சந்திப்பு இதுவாகும்.
இதையும் படியுங்கள்.... நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே விண்ணப்பிக்க வேண்டும்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X