search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 41,157 பேருக்கு தொற்று

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,02,69,796 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 42,004 பேர் குணமடைந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,11,06,065 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா வைரஸ்

    நாடு முழுவதும் ஒரே நாளில் 518 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,13,609 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,02,69,796 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 42,004 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,22,660 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


    Next Story
    ×