என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்- தேர்ச்சி விகிதத்தில் சாதனை படைத்த கேரளா
Byமாலை மலர்14 July 2021 5:28 PM GMT (Updated: 14 July 2021 5:28 PM GMT)
வளைகுடா பிராந்தியத்தில் தேர்வு நடைபெற்ற 3 மையங்களில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிக அளவாக 99.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 98.82 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு அதைவிட 0.65 சதவீதம் அதிகம் ஆகும்.
இந்த ஆண்டு அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக கண்ணூர் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் 99.85 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 98.12 சதவீத தேர்ச்சி பெற்ற வயநாடு மாவட்டம் குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டமாக உள்ளது.
கடந்த ஆண்டு 1937 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 2214 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
வளைகுடா பிராந்தியத்தில் தேர்ச்சி சதவீதம் 97.03 ஆகும். வளைகுடா பிராந்தியத்தில் தேர்வு நடைபெற்ற 3 மையங்களில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை வெளியிட்ட கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி, இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கொரோனா சூழ்நிலைகளை பொருட்படுத்தாமல் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக அவர் பாராட்டினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X