என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு நீட்டிப்பு: முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு
Byமாலை மலர்14 July 2021 5:27 AM GMT (Updated: 14 July 2021 5:27 AM GMT)
பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், பொது இடங்களில் முக கவசம் அணிந்தே நடமாட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கொரோனா 2-வது அலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில் அங்கு ஜிகா வைரஸ் நோயும் மிரட்டி வருவதால் மாநிலம் முழுவதும் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், பொது இடங்களில் முக கவசம் அணிந்தே நடமாட வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே முழு ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், எனவே கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேரள வியாபாரிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இது தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-
அனைவருக்கும் கடை மற்றும் வியாபார நிறுவனங்களை உடனே திறக்க வேண்டும் என்று விருப்பம் இருக்கும். ஆனால் இப்போதைய சூழ்நிலை அதற்கு உகந்ததாக இல்லை. எனவே வியாபாரிகள் பொறுமை காக்க வேண்டும்.
வியாபாரிகளின் உணர்வுகளை நாங்கள் அறிவோம். சூழ்நிலை சரியானதும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும். அதுவரை வியாபாரிகள் பொறுமை காக்க வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X