search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-மந்திரி பினராயி விஜயன்
    X
    முதல்-மந்திரி பினராயி விஜயன்

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு நீட்டிப்பு: முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு

    பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், பொது இடங்களில் முக கவசம் அணிந்தே நடமாட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கொரோனா 2-வது அலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

    கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில் அங்கு ஜிகா வைரஸ் நோயும் மிரட்டி வருவதால் மாநிலம் முழுவதும் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

    முக கவசம்

    பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், பொது இடங்களில் முக கவசம் அணிந்தே நடமாட வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதற்கிடையே முழு ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், எனவே கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேரள வியாபாரிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இது தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-

    அனைவருக்கும் கடை மற்றும் வியாபார நிறுவனங்களை உடனே  திறக்க வேண்டும் என்று விருப்பம் இருக்கும். ஆனால் இப்போதைய சூழ்நிலை அதற்கு உகந்ததாக இல்லை. எனவே வியாபாரிகள் பொறுமை காக்க வேண்டும்.

    வியாபாரிகளின் உணர்வுகளை நாங்கள் அறிவோம். சூழ்நிலை சரியானதும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும். அதுவரை வியாபாரிகள் பொறுமை காக்க வேண்டும் என்றார். 
    Next Story
    ×