என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இமாசல பிரதேசத்தில் கனமழை - வெள்ளத்தால் மக்கள் வாழ்க்கை பாதிப்பு
Byமாலை மலர்13 July 2021 12:00 AM GMT (Updated: 13 July 2021 12:00 AM GMT)
இமாசல பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கட்டிடங்கள், கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
சிம்லா:
இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இமாசல பிரதேச மாநிலத்தில் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இடைவிடாது பெய்த மழையால் பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக, தர்மசாலாவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பல இடங்களில் கட்டிடங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. சில இடங்களில் கட்டிடங்களை வெள்ளம் அடித்துச்சென்றுள்ளது.
அந்தவகையில் தர்மசாலாவை ஒட்டியுள்ள மாஞ்சி காட் பகுதியில் 2 கட்டிடங்களை வெள்ளம் அடித்துச்சென்றது. பாக்சுனாக்கில் அரசு பள்ளிக்கட்டிடம் உள்பட பல கட்டிடங்கள் வெள்ளத்தில் சிக்கி சேதம் அடைந்திருக்கின்றன.
மண்டி-பதன்கோட் சாலையில் பாலம் ஒன்று அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மேல் தர்மசாலாவில் கால்வாய் ஒன்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 4 கார்கள், ஏராளமான இருசக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக தர்மசாலா விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது.
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. எனினும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இமாசல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ள அவர், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்புக்காக பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X