என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேகதாது திட்டத்தை எடியூரப்பா செயல்படுத்த வேண்டும் - டி.கே.சிவக்குமார்
Byமாலை மலர்9 July 2021 9:09 PM GMT (Updated: 9 July 2021 9:09 PM GMT)
சுமலதா எம்.பி. மற்றும் குமாரசாமி இடையிலான பிரச்சினையில் காங்கிரஸ் ஒருபோதும் தலையிடாது என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மண்டியா கே.ஆர்.எஸ்.அணையில் விரிசல் ஏற்பட்டதாக கூறியுள்ள சுமலதா எம்.பி. பற்றி, குமாரசாமி சில கருத்துகளை கூறியுள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே மோதல் உண்டாகி உள்ளது. அவர்கள் பிரச்சினையில் காங்கிரஸ் ஒருபோதும் தலையிடாது.
அணையில் விரிசல் ஏற்பட்டு இருந்தால் அதுகுறித்து முதல் மந்திரி எடியூரப்பா, மந்திரிகள், நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். நாங்கள் ஏதாவது கருத்து கூறி மக்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.
சுமலதா-குமாரசாமி பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது காங்கிரஸ் வேலை அல்ல. எங்களுக்கு வேறு வேலை உள்ளது. மேகதாது திட்டத்தை எடியூரப்பா செயல்படுத்த வேண்டும். அரசு சரியாக செயல்படாத போது நாங்கள் அறிவுரை கூறுவோம். இதுதான் எங்கள் வேலை என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X