search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்
    X
    காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்

    மேகதாது திட்டத்தை எடியூரப்பா செயல்படுத்த வேண்டும் - டி.கே.சிவக்குமார்

    சுமலதா எம்.பி. மற்றும் குமாரசாமி இடையிலான பிரச்சினையில் காங்கிரஸ் ஒருபோதும் தலையிடாது என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
    பெங்களூரு:

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மண்டியா கே.ஆர்.எஸ்.அணையில் விரிசல் ஏற்பட்டதாக கூறியுள்ள சுமலதா எம்.பி. பற்றி, குமாரசாமி சில கருத்துகளை கூறியுள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே மோதல் உண்டாகி உள்ளது. அவர்கள் பிரச்சினையில் காங்கிரஸ் ஒருபோதும் தலையிடாது. 

    முதல் மந்திரி எடியூரப்பா

    அணையில் விரிசல் ஏற்பட்டு இருந்தால் அதுகுறித்து முதல் மந்திரி எடியூரப்பா, மந்திரிகள், நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். நாங்கள் ஏதாவது கருத்து கூறி மக்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. 

    சுமலதா-குமாரசாமி பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது காங்கிரஸ் வேலை அல்ல. எங்களுக்கு வேறு வேலை உள்ளது. மேகதாது திட்டத்தை எடியூரப்பா செயல்படுத்த வேண்டும். அரசு சரியாக செயல்படாத போது நாங்கள் அறிவுரை கூறுவோம். இதுதான் எங்கள் வேலை என்றார்.
    Next Story
    ×