என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரசின் 2-வது அலையை இன்னும் முழுமையாகக் கடக்கவில்லை: மத்திய அரசு
Byமாலை மலர்9 July 2021 12:29 PM GMT (Updated: 9 July 2021 12:29 PM GMT)
இந்தியாவில் இதுவரை லாம்ப்டா வைரஸ் கண்டறியப்படவில்லை என்று நிதி ஆயோக் சுகாதாரப்பிரிவு உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிதி ஆயோக் சுகாதாரப்பிரிவு உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறியதாவது:- "நாம் இன்னமும் கொரோனா 2வது அலையை முழுமையாகக் கடக்கவில்லை. இந்த சூழலில் நாம் நம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மெத்தனம் காட்டக்கூடாது.
பொது இடங்களில் சமீப நாட்களாக மக்கள் ஒன்றுகூடுகை அதிகமாக உள்ளது. அவ்வாறு கூடும்போது சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் சற்று குறைவாகவே உள்ளது. நாம், நமது பாதுகாப்பு நடவடிக்கைகளில் சமரசம் செய்யக்கூடாது.
பிரிட்டன், ரஷ்யா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் லாம்ப்டா வைரஸ் கண்டறியப்படவில்லை. ஆனால் லாம்ப்டா வைரசும் கவலை அளிக்கக்கூடிய வைரஸாகவே உள்ளது " என்றார்.
இதையும் படியுங்கள்...ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி தனிக் கட்சி தொடங்கினார்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X