என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாதுகாப்பு படை அதிரடி தாக்குதல்- காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Byமாலை மலர்8 July 2021 8:47 AM GMT (Updated: 8 July 2021 8:47 AM GMT)
குல்கா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்தனர். ராணுவ படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஆங்காங்கே பதுங்கி இருந்து பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எனவே அவர்களை கைது செய்வதற்காக பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் புல்வாமாவில் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.
அதேபோல குல்கா என்ற இடத்திலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்தனர். ராணுவ படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
அதேபோல ஜம்மு பகுதியில் மற்றொரு பயங்கரவாதியையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். நேற்று மட்டும் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
எல்லைப் பகுதிகளில் இருந்து காஷ்மீருக்குள் தொடர்ந்து பயங்கரவாதிகள் ஊடுருவி வருவதால் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஆங்காங்கே பதுங்கி இருந்து பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எனவே அவர்களை கைது செய்வதற்காக பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் புல்வாமாவில் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.
அதேபோல குல்கா என்ற இடத்திலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்தனர். ராணுவ படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
அதேபோல ஜம்மு பகுதியில் மற்றொரு பயங்கரவாதியையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். நேற்று மட்டும் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
எல்லைப் பகுதிகளில் இருந்து காஷ்மீருக்குள் தொடர்ந்து பயங்கரவாதிகள் ஊடுருவி வருவதால் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X