search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமரீந்தர் சிங்
    X
    அமரீந்தர் சிங்

    சோனியா காந்தியின் முடிவுக்கு கட்டுப்படுவோம் - அமரீந்தர் சிங் பேட்டி

    பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
    புதுடெல்லி:

    பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் களப்பணியாற்றத் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் நிலவி வருகிறது.

    பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்கிற்கு எதிராக செயல்பட்டு வரும் நவ்ஜோத் சிங் சித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்துப் பேசி இருந்தார். 

    சோனியா காந்தி

    இந்நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் நேற்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியில் நிலவும் உள்கட்சி பூசல் தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமரீந்தர் சிங் பேசுகையில், சோனியாவை சந்தித்து அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதித்தேன். பஞ்சாப்பை பொறுத்தவரை சோனியா எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவோம். வரப்போகும் தேர்தலிலதான் கவனம் செலுத்தப்படும் என்றார்.
    Next Story
    ×