search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது அணை
    X
    மேகதாது அணை

    மேகதாது அணை திட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை- எடியூரப்பா திட்டவட்டம்

    மேகதாது அணை கட்டும் பணிகள் விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் முறையான அனுமதியுடன் தொடங்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
    தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், மேகதாது அணை திட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக முதல்வர்  எடியூரப்பா கூறியுள்ளார். 

    எடியூரப்பா

    பெங்களூரு நகருக்கு ஆண்டுக்கு 23.5 டிஎம்சி தண்ணீரை சேமித்து வழங்க வேண்டிய சூழல் உள்ளது. இத்தகைய சூழல் குறித்து தமிழக அரசுக்கு விரிவாக கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 
     
    அணை கட்டும் பணிகள் விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் முறையான அனுமதியுடன் தொடங்கப்படும் என கர்நாடக முதல்வர்   எடியூரப்பா  தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×