என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவியை கொன்று எரித்துவிட்டு நாடகமாடிய கணவன் கைது
Byமாலை மலர்29 Jun 2021 8:40 AM GMT (Updated: 29 Jun 2021 8:40 AM GMT)
ஆந்திராவில் தான் சமூக ஆர்வலர் என கூறிக்கொண்டு வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் பணம் வாங்கி செலவழித்து வந்துள்ளார் கணவர்.
சித்தூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரா புரத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி. மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரின் கணவர் ஸ்ரீகாந்த் ரெட்டி. சமூக ஆர்வலர் என கூறிக்கொண்டு வந்த இவர், வேலைக்கு செல்லாமல் தன் மனைவியிடம் பணம் வாங்கி செலவழித்து வந்துள்ளார்.
இதனால் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கடந்த 22ஆம் தேதி தன் மனைவியை அடித்து கொலை செய்த ஸ்ரீகாந்த், அவரின் சடலத்தை சூட்கேஸில் வைத்து திருப்பதி அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் எரித்துள்ளார். பின்னர் தன் மனைவி டெல்டா பிளஸ் வைரசால் உயிரிழந்ததால் எரித்துவிட்டதாக கூறவே உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து போலீசில் உறவினர்கள் புகார் அளிக்கவே அபார்ட்மெண்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த போது நடந்தது அத்தனையும் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரா புரத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி. மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரின் கணவர் ஸ்ரீகாந்த் ரெட்டி. சமூக ஆர்வலர் என கூறிக்கொண்டு வந்த இவர், வேலைக்கு செல்லாமல் தன் மனைவியிடம் பணம் வாங்கி செலவழித்து வந்துள்ளார்.
இதனால் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கடந்த 22ஆம் தேதி தன் மனைவியை அடித்து கொலை செய்த ஸ்ரீகாந்த், அவரின் சடலத்தை சூட்கேஸில் வைத்து திருப்பதி அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் எரித்துள்ளார். பின்னர் தன் மனைவி டெல்டா பிளஸ் வைரசால் உயிரிழந்ததால் எரித்துவிட்டதாக கூறவே உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து போலீசில் உறவினர்கள் புகார் அளிக்கவே அபார்ட்மெண்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த போது நடந்தது அத்தனையும் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X