என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அடுத்த அஸ்திரத்தை தொடுத்த மம்தா பானர்ஜி... அதிர்ச்சி அடைந்த ஆளுநர்
Byமாலை மலர்28 Jun 2021 3:04 PM GMT (Updated: 28 Jun 2021 3:04 PM GMT)
வடக்கு வங்காளத்தில் ஆளுநர் திடீனெ சுற்றுப்பயணம் மேற்கொண்டது அரசியல் ஸ்டண்ட் என்றும், அங்கு பாஜகவின் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்களை மட்டுமே சந்தித்ததாகவும் மம்தா குற்றம் சாட்டினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் ஆளுநர் ஜெகதீப் தங்காருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாகவும், முதல்வர்-ஆளுநர் இடையே மோதல் ஏற்பட்டது. ஆளுநரை திரும்ப பெறும்படி மம்தா பானர்ஜி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், ஆளுநர் மீது புதிய குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார் மம்தா பானர்ஜி. ஆளுநர் ஜெகதீப் தங்கார் ஒரு ஊழல்வாதி என்றும், 1996ம் ஆண்டு ஹவாலா ஜெயின் வழக்கில் அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்ததாகவும் கூறினார். இது போன்ற ஒரு ஆளுநரை தொடர மத்திய அரசு ஏன் அனுமதித்துள்ளது? என்றும் மம்தா கேள்வி எழுப்பினார்.
வடக்கு வங்காளத்தில் ஆளுநர் திடீனெ சுற்றுப்பயணம் மேற்கொண்டது அரசியல் ஸ்டண்ட் என்றும், அங்கு பாஜகவின் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்களை மட்டுமே சந்தித்ததாகவும் மம்தா குற்றம் சாட்டினார்.
முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டுகளால் ஆளுநர் அதிர்ச்சி அடைந்துள்ளார். எந்தவொரு ஹவாலா ஊழலிலும் தனது பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை என்றும், ஒரு அனுபவமுள்ள அரசியல்வாதியிடமிருந்து இந்த குற்றச்சாட்டை எதிர்பார்க்கவில்லை என்றும், ஆளுநர் தங்கார் செய்தியாளர்களிடம் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X