என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லடாக்கில் சுற்றுப்பயணம்- ராணுவ வீரர்களுடன் உரையாடிய ராஜ்நாத் சிங்
Byமாலை மலர்27 Jun 2021 8:49 AM GMT (Updated: 27 Jun 2021 8:49 AM GMT)
லடாக்கின் லே பகுதியில் ராணுவ வீரர்களை சந்தித்து பேசிய ராஜ்நாத் சிங், ‘நீங்கள் நாட்டை பாதுகாப்பதைப்போல் நாடும் உங்களை பாதுகாக்கும்’ என்றார்.
லே:
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மூன்று நாள் பயணமாக லடாக் சென்றுள்ளார். அங்கு லடாக் எல்லையில் உள்ள பி.ஆர்.ஓ எனப்படும் எல்லைச்சாலை கட்டமைப்பு நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லையோர கட்டமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும், லடாக் எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பின் ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர் லடாக்கின் லே பகுதியில் ராணுவ வீரர்களை ராஜ்நாத் சிங் சந்தித்து அவர்களுடன் உரையாடினார். அப்போது, ‘நீங்கள் நாட்டை பாதுகாப்பதைப்போல் நாடும் உங்களை பாதுகாக்கும்’ என்றார். மேலும், உங்களுக்கு எங்காவது ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதை பகிர்ந்துகொள்வதற்காக ஒரு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் (எல்.ஏ.எச்.டி.சி), கார்கில், லே பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளையும் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார்.
சீனாவுடன் லடாக் எல்லையில் பிரச்சினை முடிவுக்கு வராத நிலையில், பாதுகாப்புத்துறை மந்திரியின் சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X