search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ வீரர்களை சந்தித்த ராஜ்நாத் சிங்
    X
    ராணுவ வீரர்களை சந்தித்த ராஜ்நாத் சிங்

    லடாக்கில் சுற்றுப்பயணம்- ராணுவ வீரர்களுடன் உரையாடிய ராஜ்நாத் சிங்

    லடாக்கின் லே பகுதியில் ராணுவ வீரர்களை சந்தித்து பேசிய ராஜ்நாத் சிங், ‘நீங்கள் நாட்டை பாதுகாப்பதைப்போல் நாடும் உங்களை பாதுகாக்கும்’ என்றார்.
    லே:

    பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மூன்று நாள் பயணமாக லடாக் சென்றுள்ளார். அங்கு லடாக் எல்லையில் உள்ள பி.ஆர்.ஓ எனப்படும் எல்லைச்சாலை கட்டமைப்பு நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லையோர கட்டமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார். 

    மேலும், லடாக் எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பின் ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

    அதன்பின்னர் லடாக்கின் லே பகுதியில் ராணுவ வீரர்களை ராஜ்நாத் சிங் சந்தித்து அவர்களுடன் உரையாடினார். அப்போது, ‘நீங்கள் நாட்டை பாதுகாப்பதைப்போல் நாடும் உங்களை பாதுகாக்கும்’ என்றார். மேலும், உங்களுக்கு எங்காவது ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதை பகிர்ந்துகொள்வதற்காக ஒரு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது என கூறினார்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

    மேலும், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் (எல்.ஏ.எச்.டி.சி), கார்கில், லே பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளையும் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார்.

    சீனாவுடன் லடாக் எல்லையில் பிரச்சினை முடிவுக்கு வராத நிலையில், பாதுகாப்புத்துறை மந்திரியின் சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    Next Story
    ×