search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு பஸ்சில் கடத்திய 5 கிலோ தங்க கட்டி பறிமுதல்

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு பஸ்சில் கொண்டு வந்த தங்க கட்டிகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் பஞ்சலிங்கார் சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு சொகுசு பஸ் ஒன்று வந்தது. பஸ்சில் இருந்த பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். ஒரு பயணியின் சூட்கேசில் தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் இருந்தது.

    மொத்தம் 5 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்கக்கட்டிகள் நகைகள் இருந்தது தெரியவந்தது.

    பஸ்சில் தங்கக்கட்டிகள் கொண்டு வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெங்களூரை சேர்ந்த ஹேமந்த் ஜெயின் என்பது தெரியவந்தது. நகை வியாபாரத்திற்காக தங்க கட்டிகளை கொண்டு சென்றதாக போலீசாரிடம் அவர் கூறினார்.

    தங்க கட்டிகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். நகைகள் கடத்தி வரப்பட்டதா? ஹேமந்த் ஜெயின் வரிஏய்ப்பு ஏதும் செய்துள்ளாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Next Story
    ×