என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு பஸ்சில் கடத்திய 5 கிலோ தங்க கட்டி பறிமுதல்
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் பஞ்சலிங்கார் சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு சொகுசு பஸ் ஒன்று வந்தது. பஸ்சில் இருந்த பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். ஒரு பயணியின் சூட்கேசில் தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் இருந்தது.
மொத்தம் 5 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்கக்கட்டிகள் நகைகள் இருந்தது தெரியவந்தது.
பஸ்சில் தங்கக்கட்டிகள் கொண்டு வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெங்களூரை சேர்ந்த ஹேமந்த் ஜெயின் என்பது தெரியவந்தது. நகை வியாபாரத்திற்காக தங்க கட்டிகளை கொண்டு சென்றதாக போலீசாரிடம் அவர் கூறினார்.
தங்க கட்டிகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். நகைகள் கடத்தி வரப்பட்டதா? ஹேமந்த் ஜெயின் வரிஏய்ப்பு ஏதும் செய்துள்ளாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்