என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாஜகவின் வெற்றிக்கே உதவும்: நானா படோலே
Byமாலை மலர்24 Jun 2021 1:51 AM GMT (Updated: 24 Jun 2021 1:51 AM GMT)
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளை தவிர்த்து 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் நானா படோலே ஈடுபட்டு உள்ளார்.
மும்பை :
மகாராஷ்டிராவில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது.
இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே சமீபத்தில் அளித்த பேட்டி கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி அடுத்து வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடும் என கூறினார். இதற்கு சிவசேனா தலைவரும், முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே, தற்போதைய சூழலில் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமல் தனியாக தேர்தல் பற்றி பேசுபவர்களை மக்கள் செருப்பால் அடிப்பார்கள் என மறைமுகமாக விமர்சித்தார்.
இதற்கு மத்தியில் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளை தவிர்த்து 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் நானா படோலே ஈடுபட்டு உள்ளார். இது தொடர்பாக 8 கட்சி தலைவர்களை சந்தித்து பேசியதோடு, தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஜல்காவில் நேற்று காங்கிரஸ் தலைவர் நானா படோலே நிருபர்களிடம் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் உதவியின்றி பாஜக எதிர்ப்பு கூட்டணி அமைப்பது என்பது சாத்தியமில்லை. அவ்வாறு செய்தால் அந்த முயற்சிகள் மறைமுகமாக பாஜகவுடைய வெற்றிக்கே உதவும். வேலையின்மை நெருக்கடியை எதிர்கொள்பவர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் நலனுக்கு காங்கிரஸ் கட்சி முன்னுரிமை அளிக்கும்.
நான் ஏற்கனவே தேர்தலை பற்றி பேசியுள்ளேன். இது கட்சியின் தொண்டர்களை சென்று சேர்ந்துள்ளது. தேர்தல் இன்னும் 3 ஆண்டுகள் தொலைவில் உள்ளது. நான் தற்போது அதைப்பற்றி பேச மாட்டேன்.
கொரோனா தொற்றுநோயை கையாள்வதில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு செய்த தவறுகளையும், விவசாயிகளை அவர்கள் புறக்கணிப்பதையும் நாங்கள் முன்னிலைப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது.
இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே சமீபத்தில் அளித்த பேட்டி கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி அடுத்து வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடும் என கூறினார். இதற்கு சிவசேனா தலைவரும், முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே, தற்போதைய சூழலில் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமல் தனியாக தேர்தல் பற்றி பேசுபவர்களை மக்கள் செருப்பால் அடிப்பார்கள் என மறைமுகமாக விமர்சித்தார்.
இதற்கு மத்தியில் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளை தவிர்த்து 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் நானா படோலே ஈடுபட்டு உள்ளார். இது தொடர்பாக 8 கட்சி தலைவர்களை சந்தித்து பேசியதோடு, தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஜல்காவில் நேற்று காங்கிரஸ் தலைவர் நானா படோலே நிருபர்களிடம் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் உதவியின்றி பாஜக எதிர்ப்பு கூட்டணி அமைப்பது என்பது சாத்தியமில்லை. அவ்வாறு செய்தால் அந்த முயற்சிகள் மறைமுகமாக பாஜகவுடைய வெற்றிக்கே உதவும். வேலையின்மை நெருக்கடியை எதிர்கொள்பவர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் நலனுக்கு காங்கிரஸ் கட்சி முன்னுரிமை அளிக்கும்.
நான் ஏற்கனவே தேர்தலை பற்றி பேசியுள்ளேன். இது கட்சியின் தொண்டர்களை சென்று சேர்ந்துள்ளது. தேர்தல் இன்னும் 3 ஆண்டுகள் தொலைவில் உள்ளது. நான் தற்போது அதைப்பற்றி பேச மாட்டேன்.
கொரோனா தொற்றுநோயை கையாள்வதில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு செய்த தவறுகளையும், விவசாயிகளை அவர்கள் புறக்கணிப்பதையும் நாங்கள் முன்னிலைப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X