search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மராட்டியத்தில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

    தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 11,032- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 163- பேர் உயிரிழந்துள்ளனர்.
    மும்பை:

    மராட்டியத்தில் கொரோனா கடந்த இரு தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,006- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 11,032- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 163- பேர் உயிரிழந்துள்ளனர்.

    மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 59 லட்சத்து 97 ஆயிரத்து 587- ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 57 லட்சத்து 53 ஆயிரத்து 290- ஆக உள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 303- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை  1 லட்சத்து 21 ஆயிரத்து 859- ஆக உள்ளது.
    Next Story
    ×