search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    அரவிந்த் கெஜ்ரிவால்

    பஞ்சாப் மக்களின் ஒரே நம்பிக்கை ஆம் ஆத்மி கட்சிதான்: அரவிந்த் கெஜ்ரிவால்

    அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதவாக்கில் பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் காய் நகர்த்தி வருகிறார்.
    புதுடெல்லி :

    டெல்லியில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப்பிலும் பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதவாக்கில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் காய் நகர்த்தி வருகிறார்.

    அதற்காக அவர் இன்று (திங்கட்கிழமை) பஞ்சாப்புக்கு செல்கிறார். இந்தநிலையில், அவர் பஞ்சாபி மொழியில் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பஞ்சாப் மாற்றத்தை விரும்புகிறது. அதற்கு அம்மக்களிடம் மீதி இருக்கும் ஒரே நம்பிக்கை ஆம் ஆத்மி கட்சிதான்’’ என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×