search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி போடும் பணி
    X
    தடுப்பூசி போடும் பணி

    டெல்லியில் புதிய பாதிப்பு 124 ஆக குறைந்தது - 398 பேர் குணமடைந்தனர்

    டெல்லியில் 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை இன்று மிகவும் குறைந்துள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் கொரோனா வைரசின் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. நாளை முதல் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

    நேற்று 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு மிக குறைந்த பாதிப்பாகும். பாதிப்பு விகிதம் 0.18 சதவீதத்தில் இருந்து 0.17 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 398 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,091 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
    Next Story
    ×