என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெலுங்கானாவில் ஊரடங்கு முடிவுக்கு வந்தது- ஜூலை முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
Byமாலை மலர்19 Jun 2021 1:16 PM GMT (Updated: 19 Jun 2021 1:16 PM GMT)
ஊரடங்கின்போது விதிக்கப்பட்ட அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் முழு அளவில் அகற்றும்படி அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், நாளை முதல் ஊரடங்கு முற்றிலும் நீக்கப்படுவதாகவும், எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது என்றும் தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. மேலும், ஜூலை 1ம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களையும் திறக்கவும் அறிவுறுத்தி உள்ளது. இதற்காக முழு அளவில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும், மாணவர்களை நேரடி வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ஊரடங்கின்போது விதிக்கப்பட்ட அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் முழு அளவில் அகற்றும்படி அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: கொரோனா 3வது அலை 6 முதல் 8 வாரத்தில் தாக்கும்- எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை
வெள்ளிக்கிழமை நிலவரப்படி தெலுங்கானாவில், கொரோனா பாதிப்பு விகிதம் 1.14 சதவீதமாக குறைந்திருந்தது. தினசரி பாதிப்பு 1400 ஆகவும், உயிரிழப்பு 12 ஆகவும் இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X