என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா 3வது அலை 6 முதல் 8 வாரத்தில் தாக்கும்- எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை
Byமாலை மலர்19 Jun 2021 7:43 AM GMT (Updated: 19 Jun 2021 7:43 AM GMT)
கொரோனா முதல் மற்றும் 2வது அலைக்கு இடையில் என்ன நடந்தது என்பதில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை.
புதுடெல்லி:
கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 2.98 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3.85 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 7.6 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை 6 முதல் 8 வாரத்தில் தாக்கும் என்று எய்ம்ஸ் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனா 3-வது அலை தவிர்க்க முடியாதது. அடுத்த 6 முதல் 8 வாரங்களில் நாட்டை தாக்கும். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கோவிட் நடைமுறைகளை பின்பற்றுவது குறைய தொடங்கி உள்ளது.
முதல் மற்றும் 2-வது அலைக்கு இடையில் என்ன நடந்தது என்பதில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை.
மக்கள் கூட்டங்கள் உருவாகின்றன. மக்கள் அதிக அளவில் திரள்கிறார்கள். இதனால்தான் தேசிய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சில சமயங்களில் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்குள் கொரோனாவின் 3-வது அலை ஏற்படும். இது சில காலத்துக்கு இருக்கலாம்.
கூட்டத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் பின்பற்றுவதை பொறுத்து எல்லாம் இருக்கிறது.
இவ்வாறு ரன்தீப் குலேரியா கூறி உள்ளார்.
கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் எல்லாவிதமான முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளன.
கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 2.98 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3.85 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 7.6 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா முதல் அலையில் பாதிப்புதான் அதிகமாக இருந்தது. ஆனால் 2-வது அலையில் உயிரிழப்பு அதிக அளவில் காணப்பட்டது. 2-வது அலை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.
இதையும் படியுங்கள்...இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,753 பேருக்கு தொற்று
இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை குறித்து மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் பல்வேறு விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை 6 முதல் 8 வாரத்தில் தாக்கும் என்று எய்ம்ஸ் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனா 3-வது அலை தவிர்க்க முடியாதது. அடுத்த 6 முதல் 8 வாரங்களில் நாட்டை தாக்கும். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கோவிட் நடைமுறைகளை பின்பற்றுவது குறைய தொடங்கி உள்ளது.
முதல் மற்றும் 2-வது அலைக்கு இடையில் என்ன நடந்தது என்பதில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை.
மக்கள் கூட்டங்கள் உருவாகின்றன. மக்கள் அதிக அளவில் திரள்கிறார்கள். இதனால்தான் தேசிய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சில சமயங்களில் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்குள் கொரோனாவின் 3-வது அலை ஏற்படும். இது சில காலத்துக்கு இருக்கலாம்.
கூட்டத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் பின்பற்றுவதை பொறுத்து எல்லாம் இருக்கிறது.
இவ்வாறு ரன்தீப் குலேரியா கூறி உள்ளார்.
கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் எல்லாவிதமான முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X