என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனக்கு வழங்கப்பட்டுள்ள ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை விலக்கிக்கொள்ள முகுல்ராய் வேண்டுகோள்
Byமாலை மலர்18 Jun 2021 2:14 AM GMT (Updated: 18 Jun 2021 2:14 AM GMT)
மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலை முன்னிட்டு முகுல்ராய்க்கு வழங்கப்பட்டிருந்த ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு ‘இசட்’ பிரிவுக்கு உயர்த்தப்பட்டது.
புதுடெல்லி:
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முன்னணி தலைவராக இருந்த முகுல்ராய் கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜனதாவில் இணைந்தார். அவருக்கு கட்சியின் தேசிய துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. பா.ஜனதாவில் இணைந்ததும் அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலை முன்னிட்டு அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு ‘இசட்’ பிரிவுக்கு உயர்த்தப்பட்டது.
அதன்படி, மேற்கு வங்காளத்தில் முகுல்ராய்க்கு ஆயுதம் தாங்கிய 24 சி.ஆர்.பி.எப். கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்கி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதாவில் இருந்து விலகி, தனது மகனுடன் மீண்டும் அவர் திரிணாமுல் காங்கிரசுக்கு திரும்பினார். இதைத்தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை விலக்கிக்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு அவர் கடிதம் எழுதினார்.
இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு அவர் மற்றும் அவரது மகனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை திரும்பப்பெற்று உள்ளது. இது தொடர்பாக சி.ஆர்.பி.எப். நிர்வாகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. முகுல்ராய் மற்றும் அவரது மகனுக்கு இனிமேல் மாநில போலீசாரின் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முன்னணி தலைவராக இருந்த முகுல்ராய் கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜனதாவில் இணைந்தார். அவருக்கு கட்சியின் தேசிய துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. பா.ஜனதாவில் இணைந்ததும் அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலை முன்னிட்டு அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு ‘இசட்’ பிரிவுக்கு உயர்த்தப்பட்டது.
அதன்படி, மேற்கு வங்காளத்தில் முகுல்ராய்க்கு ஆயுதம் தாங்கிய 24 சி.ஆர்.பி.எப். கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்கி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதாவில் இருந்து விலகி, தனது மகனுடன் மீண்டும் அவர் திரிணாமுல் காங்கிரசுக்கு திரும்பினார். இதைத்தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை விலக்கிக்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு அவர் கடிதம் எழுதினார்.
இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு அவர் மற்றும் அவரது மகனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை திரும்பப்பெற்று உள்ளது. இது தொடர்பாக சி.ஆர்.பி.எப். நிர்வாகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. முகுல்ராய் மற்றும் அவரது மகனுக்கு இனிமேல் மாநில போலீசாரின் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X