என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல் காந்தி இன்னும் தடுப்பூசி போடவில்லை- காரணம் இதுதான்
Byமாலை மலர்17 Jun 2021 11:11 AM GMT (Updated: 17 Jun 2021 11:11 AM GMT)
காங்கிரஸ் தலைவர் சோனியா கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கோவேக் சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி 2 டோஸ்கள் செலுத்தப்படுகிறது.
முக்கிய பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கொரோனா தடுப்பூசிக்கான 2 டோஸ்களையும் செலுத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு இருந்ததால் ராகுல்காந்தி இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. அதற்காக அவர் காத்திருக்கிறார். இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர் சோனியா கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டார். ராகுல்காந்தி கடந்த மாதம் 16-ந் தேதி தடுப்பூசி போட்டுக்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்து இருந்தது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து மீண்டு 3 மாதங்களுக்கு பிறகே தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதால் ராகுல்காந்தி தடுப்பூசி போடுவதற்காக காத்து இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X