search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி போடும் பணி
    X
    தடுப்பூசி போடும் பணி

    இந்தியாவில் குணமடையும் விகிதம் 95.80 சதவீதமாக உயர்வு... கொரோனா அப்டேட்ஸ்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. பாதிப்பு குறைந்ததையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. 

    இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 72 நாட்களில் மிகக்குறைந்த பாதிப்பு ஆகும். மொத்த பாதிப்பு 2,96,33,105 ஆக உயர்ந்துள்ளது. 

    வாராந்திர பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கும் கீழ் சரிந்து, தற்போது 4.17 சதவீதமாக உள்ளது. தினசரி பாதிப்பு 3.22 சதவீதமாக உள்ளது. தினசரி பாதிப்பு விகிதமானது 9 நாட்களாக 5 சதவீதத்திற்கு கீழ் உள்ளது.

    நாடு முழுவதும் ஒரே நாளில் 2542 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,79,573 ஆக உயர்ந்துள்ளது. 

    கொரோனா பரிசோதனை

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,83,88,100  ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,07,628 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.28 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 95.80 சதவீதமாக உயர்ந்துள்ளது. 


    சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்தை விட குறைவாகவே உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,65,432  பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 26,19,72,014 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

    Next Story
    ×