search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து
    X
    கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து

    அறிவியல்பூர்வ ஆதாரத்தின் அடிப்படையிலேயே கோவிஷீல்டு இடைவெளி அதிகரிப்பு -மத்திய குழு தலைவர்

    கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்திருந்தார்.
    புதுடெல்லி:

    கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் உள்ள இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 டோஸ்களுக்குமான இடைவெளியை 12 வாரம் முதல் 16 வாரங்கள் வரை நீட்டிக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்தது. இரண்டாவது டோஸ் 12-16 வாரங்களுக்குள் வழங்கப்பட்டால் கூடுதல் பலன் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசிக்கான நெறிமுறை மாற்றப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசியின் இடைவெளியை குறைப்பது பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதனால் கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களிடையே, 2-வது டோஸ் செலுத்துவது குறித்த குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.  

    நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால்

    கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்திருந்தார். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையிலேயே தடுப்பூசிக்கான இடைவெளி குறைக்கப்பட்டது என்றும், இது குறித்து தேசிய நோய்த் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு வழங்கும் வழிமுறைகளின்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


    இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்குமான இடைவெளியை அதிகரிப்பது தொடர்பான முடிவு அறிவியல்பூர்வமான ஆதாரத்தின் அடிப்படையில், வெளிப்படையான முறையில் எடுக்கப்பட்டது என்று தேசிய நோய்த் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்டிஏஜிஐ) தலைவர் என்.கே.அரோரா கூறி உள்ளார். ஆலோசனைக் குழு உறுப்பினர்களிடையே இதில் கருத்து வேறுபாடு இல்லை என்றும் அவர் கூறியதாக மத்திய சுகாதார அமைச்சகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
    Next Story
    ×