என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இன்றைய கொரோனா பாதிப்பு 36,389
Byமாலை மலர்15 Jun 2021 2:31 PM GMT (Updated: 15 Jun 2021 2:31 PM GMT)
இந்திய அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதல் இடத்தில் இருந்து வந்த நிலையில், இன்று கேரளா முதலிடத்திற்கு வந்துள்ளது.
இந்தியாவில் தென்மாநிலங்களில்தான் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதல் இடத்தில் இருந்தது. இன்று கேரளா முதல் இடத்தில் உள்ளது. தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
கேரளாவில் இன்று புதிதாக 12,246 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,356 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 166 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 1,12,361 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 11,508 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 11,805 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23,207 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 267 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 1,25,215 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,741 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,567 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 53 பேர் உயிரிழந்துள்ளனர். 75,134 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கர்நாடகாவில் இன்று 5,041 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 14,785 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 115 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 1,62,282 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,556 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2,070 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் இன்று 36,389 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இன்றைய காலை அறிக்கையின்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,471 ஆகும். இந்த ஐந்து மாநிலங்களில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கு மேல் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X