என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சர்வதேச தரத்துடன் அயோத்தியில் ரூ.400 கோடியில் நவீன பஸ் நிலையம் - உ.பி. மந்திரிசபை ஒப்புதல்
Byமாலை மலர்14 Jun 2021 11:29 PM GMT (Updated: 14 Jun 2021 11:29 PM GMT)
அயோத்தி-சுல்தான்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு 4 வழிப்பாதை மேம்பாலம் கட்டவும் மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
லக்னோ:
அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில், அங்கு சர்வதேச தரத்தில் ரூ.400 கோடி செலவில் அதிநவீன பஸ் நிலையம் கட்டப்படுகிறது. உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற மாநில மந்திரிசபை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
9 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் பஸ் நிலையம் கட்டப்படுகிறது. அரசு-தனியார் கூட்டு அடிப்படையிலோ அல்லது மாநில அரசாலோ இந்த பஸ் நிலையம் கட்டப்படும்.
மேலும், அயோத்தி-சுல்தான்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு 4 வழிப்பாதை மேம்பாலம் கட்டவும் மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இது, ரூ.20 கோடியே 17 லட்சம் செலவில் கட்டப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X