என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
6-12 வயதினருக்கான தடுப்பூசி பரிசோதனைக்கு தன்னார்வலர்கள் தேர்வு
Byமாலை மலர்14 Jun 2021 10:47 PM GMT (Updated: 14 Jun 2021 10:47 PM GMT)
12 முதல் 18 வயதிலான குழந்தை தன்னார்வலர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் முதல் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியான கோவேக்சின், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடப்பட்டு வருகிறது.
ஆனால் 2 முதல் 18 வயதினருக்கு இந்த தடுப்பூசியை போடும்முன், ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்படும் இதற்கான மருத்துவ பரிசோதனையை முடிக்க வேண்டும்.
மூன்று கட்டமாக நடைபெறும் அந்த பரிசோதனையில் 12-18, 6-12, 2-6 வயது பிரிவுகளில் தலா 175 தன்னார்வலர்களுக்கு மருந்து செதுத்தி பரிசோதிக்கப்படும்.
இதில் 2-ம் கட்ட பரிசோதனைக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் கடந்த மே 12-ந் தேதி அனுமதி அளித்தார்.
அதன்படி, 12 முதல் 18 வயதிலான குழந்தை தன்னார்வலர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் முதல் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அடுத்தபடியாக 6-12 வயது பிரிவில் பரிசோதனை மேற்கொள்வதற்கு தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணி டெல்லி எய்ம்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X