search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்பி - கோப்புப்படம்
    X
    செல்பி - கோப்புப்படம்

    செல்பி எடுத்தபோது விபரீதம் - மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த மருத்துவ மாணவி பலி

    செல்பி மோகத்தால் மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த மருத்துவ மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    இந்தூர்:

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சிலிக்கான் சிட்டி பகுதியை சேர்ந்தவர் நேகா (வயது 22). இவர் அங்குள்ள மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேகா தனது சகோதரன் சவுரவ் உடன் வீட்டிற்கு அருகே உள்ள மேம்பாலத்தில் நடைபயிற்சி சென்றார்.

    அப்போது மேம்பாலத்தின் சுவர் மீது ஏறி நேகா அமர்ந்து தனது சகோதரனிடம் ஏதேனும் தின்பண்டம் வாங்கித்தருமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சவுரவ் தனது சகோதரிக்கு தின்பண்டம் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது, மேம்பால சுவர் மீது ஏறி நின்றபடி செல்பி எடுக்க நேகா முயன்றார். இதில் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய அவர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்.

    படுகாயம் அடைந்த நேகா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    செல்பி மோகத்தால் மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த மருத்துவ மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×