என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2024 தேர்தலிலும் பிரதமர் மோடியே மீண்டும் வெற்றி பெறுவார் - தேவேந்திர பட்னாவிஸ் உறுதி
Byமாலை மலர்13 Jun 2021 9:41 PM GMT (Updated: 13 Jun 2021 9:41 PM GMT)
எதிர்க்கட்சிகள் என்ன திட்டம் போட்டாலும் பிரச்சினையில்லை, அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் பிரதமர் மோடியே வெற்றி பெறுவார் என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
மும்பை:
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கடந்த சில நாட்களுக்கு முன் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நடந்தது.
இந்த சந்திப்பு நடந்த மறுநாள், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் பா.ஜ.க.வுக்கு எதிராக பெரிய கூட்டணி தேவைப்படுகிறது என்றார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் என்ன திட்டம் போட்டாலும் 2024 தேர்தலிலும் பிரதமர் மோடி தான் வெற்றி பெறுவார் என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
யார், யாரை சந்திக்க வேண்டும் என எந்த தடைகளும் கிடையாது. எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியும் அவர்களுக்கு ஏற்ற வகையில் வியூகங்களை அமைக்கலாம். நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
யார் என்ன வியூகங்களை வகுத்தாலும், இன்று மோடி உள்ளார். அவர் தான் 2024-லிலும் இருப்பார். பா.ஜ.க., பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வியூகங்கள் அமைத்தாலும் 2024-ல் பிரதமர் மோடியின் கீழ் தான் புதிய அரசு அமையும் என தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கடந்த சில நாட்களுக்கு முன் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நடந்தது.
இந்த சந்திப்பு நடந்த மறுநாள், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் பா.ஜ.க.வுக்கு எதிராக பெரிய கூட்டணி தேவைப்படுகிறது என்றார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் என்ன திட்டம் போட்டாலும் 2024 தேர்தலிலும் பிரதமர் மோடி தான் வெற்றி பெறுவார் என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
யார் என்ன வியூகங்களை வகுத்தாலும், இன்று மோடி உள்ளார். அவர் தான் 2024-லிலும் இருப்பார். பா.ஜ.க., பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வியூகங்கள் அமைத்தாலும் 2024-ல் பிரதமர் மோடியின் கீழ் தான் புதிய அரசு அமையும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X