search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி போடும் பணி
    X
    தடுப்பூசி போடும் பணி

    இந்தியாவில் புதிதாக 80,834 பேருக்கு கொரோனா தொற்று -3,303 பேர் மரணம்

    இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு 1.26 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 95.26 சதவீதமாகவும் உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. பாதிப்பு குறைந்ததையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. 

    இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 80,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,94,39,989 ஆக உயர்ந்துள்ளது. 

    பரிசோதனை

    நாடு முழுவதும் ஒரே நாளில் 3,303 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,70,384 ஆக உயர்ந்துள்ளது. 


    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,80,43,446  ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,32,062 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.26 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 95.26 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

    நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 10,26,159 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 25,31,95,048 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
    Next Story
    ×