என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவின் 3-வது அலை வருவதற்கு வாய்ப்பு - கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி
Byமாலை மலர்12 Jun 2021 8:29 PM GMT (Updated: 12 Jun 2021 8:29 PM GMT)
கொரோனாவின் 2-வது அலையை வீழ்த்துவதில் டெல்லி மக்கள் தோளோடு தோள் நின்றனர். இதில் இணைந்து கொண்ட தொழில் துறையும் நன்றி பாராட்டத்தகுந்தது என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
கொரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்த இந்தியா, 2-வது அலைக்கு எதிரான போரில் பெருத்த உயிர்ச்சேதங்களை சந்தித்தது. பெரும் பொருளாதார இழப்புகளையும் எதிர்ெகாண்டு வருகிறது.
பல மாநிலங்களில் ஊரடங்கு, பொது முடக்கங்களை அமல்படுத்தி, கடுமையான கட்டுப்பாட்டையும் விதித்து இப்போதுதான் 2-வது அலை தொடர்ந்து வீழ்ச்சிப்பாதையில் பயணிக்கத்தொடங்கி உள்ளது.
இந்த தருணத்தில் டெல்லியில் உள்ள 9 ஆஸ்பத்திரிகளில், அந்த மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஆக்சிஜன் ஆலைகளை தொடங்கி வைத்தார்.
அதனிடையே அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 3-வது அலை வருவதற்கு வாய்ப்புகள் வலுவாக உள்ளன. இதற்கான அறிகுறிகள் இங்கிலாந்தில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. அங்கு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாம் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது.
கொரோனாவின் 3-வது அலை நம்மைத் தாக்கக்கூடாது என்று பிரார்த்திப்போம். ஆனால் அதையும் தாண்டி 3-வது அலை வந்தால், டெல்லி மீண்டும் ஒன்றுபட்டு நின்று போராடும்.
2-வது அலையை டெல்லி சந்தித்தபோது ஒன்றுபட்டு நின்று போராடி, கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டு, பரவலை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ள மக்களைப் பாராட்டுகிறேன்.
கொரோனாவின் 2-வது அலையை வீழ்த்துவதில் டெல்லி மக்கள் தோளோடு தோள் நின்றனர். இதில் இணைந்து கொண்ட தொழில் துறையும் நன்றி பாராட்டத்தகுந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்த இந்தியா, 2-வது அலைக்கு எதிரான போரில் பெருத்த உயிர்ச்சேதங்களை சந்தித்தது. பெரும் பொருளாதார இழப்புகளையும் எதிர்ெகாண்டு வருகிறது.
பல மாநிலங்களில் ஊரடங்கு, பொது முடக்கங்களை அமல்படுத்தி, கடுமையான கட்டுப்பாட்டையும் விதித்து இப்போதுதான் 2-வது அலை தொடர்ந்து வீழ்ச்சிப்பாதையில் பயணிக்கத்தொடங்கி உள்ளது.
இந்த தருணத்தில் டெல்லியில் உள்ள 9 ஆஸ்பத்திரிகளில், அந்த மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஆக்சிஜன் ஆலைகளை தொடங்கி வைத்தார்.
அதனிடையே அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 3-வது அலை வருவதற்கு வாய்ப்புகள் வலுவாக உள்ளன. இதற்கான அறிகுறிகள் இங்கிலாந்தில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. அங்கு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாம் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது.
கொரோனாவின் 3-வது அலை நம்மைத் தாக்கக்கூடாது என்று பிரார்த்திப்போம். ஆனால் அதையும் தாண்டி 3-வது அலை வந்தால், டெல்லி மீண்டும் ஒன்றுபட்டு நின்று போராடும்.
கொரோனாவின் 2-வது அலையை வீழ்த்துவதில் டெல்லி மக்கள் தோளோடு தோள் நின்றனர். இதில் இணைந்து கொண்ட தொழில் துறையும் நன்றி பாராட்டத்தகுந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X