என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி. கிராமத்தில் உருவான கொரோனா தேவி கோவில் -மனமுருகி பிரார்த்தனை செய்யும் மக்கள்
Byமாலை மலர்12 Jun 2021 12:21 PM GMT (Updated: 12 Jun 2021 12:21 PM GMT)
காலரா, அம்மை போன்ற நோய்கள் பரவியபோது மக்கள் மாரியம்மன், பிளேக் மாரியம்மன் என்ற தெய்வ வழிபாட்டை உருவாக்கி வழிபட்டனர்.
லக்னோ:
கொரோனா பெருந்தொற்று மனித சமூகத்தை படாதபாடு படுத்திவருவதால், வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்படி அவரவர் தங்கள் இஷ்ட தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்தவண்ணம் உள்ளனர்.
காலரா, அம்மை போன்ற நோய்கள் பரவியபோது மக்கள் மாரியம்மன், பிளேக் மாரியம்மன் என்ற தெய்வ வழிபாட்டை உருவாக்கி வழிபட்டனர். அதேபோன்று, தற்போது மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கவும், தொற்றின் வேகம் குறையவும் வேண்டி பல்வேறு இடங்களில் கோரோனா தேவி சிலையை நிறுவி வழிபடத் தொடங்கி உள்ளனர்.
இந்த வழிபாடுகள் அனைத்தும் சாஸ்திரங்களின்படி நடைபெறாவிட்டாலும், மக்களாகவே இதற்கான நெறிமுறைகளை ஏற்படுத்தி உள்ளனர்.
அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம், சுக்லபூர் கிராமத்தில் கொரோனா தேவிக்கு கோவில் கட்டி உள்ளனர். வேப்ப மரத்தடியில் கொரோனா தேவிக்கு சிலை அமைத்து வழிபாடு நடத்துகின்றனர். இங்கு ஏராளமான மக்கள் வருகை தந்து, கொரோனாவில் இருந்து பாதுகாக்கும்படி பிரார்த்தனை செய்கின்றனர். இந்த கொரோனா தேவிக்கு மாஸ்க் அணிவித்துள்ளனர். கொரோனா தேவிக்கு இனிப்பு படையலிட்டு அனைவருக்கும் பிரசாதமாக வழங்குகின்றனர்.
தமிழகத்தில் கோவை இருகூர் பகுதியில், காமாட்சி புரி ஆதீனம் சார்பில் கொரோனா தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X