search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு-உயிரிழப்பு வெகுவாக குறைந்தது

    கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 60 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 4 ஆக குறைந்துள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் நேற்றைய பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 30 ஆயிரத்து 224 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 9,808 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 17 ஆயிரத்து 289 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 179 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 99 ஆக உயர்ந்துள்ளது.

    ஒரே நாளில் 23,449 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 60 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 4 ஆக குறைந்துள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 2,028 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பாகல்கோட்டையில் 46 பேர், பல்லாரியில் 212 பேர், பெலகாவியில் 443 பேர், பெங்களூரு புறநகரில் 125 பேர், பீதரில் 10 பேர், சாம்ராஜ்நகரில் 106 பேர், சிக்பள்ளாப்பூரில் 173 பேர், சிக்கமகளூருவில் 287 பேர், சித்ரதுர்காவில் 196 பேர், தட்சிண கன்னடாவில் 525 பேர், தாவணகெரேயில் 384 பேர், தார்வாரில் 275 பேர், கதக்கில் 78 பேர், ஹாசனில் 659 பேர், ஹாவேரியில் 211 பேர், கலபுரகியில் 63 பேர், குடகில் 196 பேர், கோலாரில் 298 பேர், கொப்பலில் 165 பேர், மண்டியாவில் 387 பேர், மைசூருவில் 974 பேர், ராய்ச்சூரில் 56 பேர், ராமநகரில் 42 பேர், சிவமொக்காவில் 703 பேர், துமகூருவில் 589 பேர், உடுப்பியில் 205 பேர், உத்தரகன்னடாவில் 187 பேர், விஜயாப்புராவில் 152 பேர், யாதகிரியில் 33 பேருக்கு
    கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 44 பேரும், பாகல்கோட்டையில் 5 பேரும், பல்லாரியில் 4 பேரும், பெலகாவியில் 4 பேரும், பெங்களூரு புறநகரில் 8 பேரும், பீதரில் ஒருவரும், சாம்ராஜ்நகரில் 3 பேரும், சிக்பள்ளாப்பூரில் 5 பேரும், சிக்கமகளூருவில் 3 பேரும், சித்ரதுர்காவில் இறப்பு இல்லை, தட்சிண கன்னடாவில் 5 பேரும், தாவணகெரேயில் 4 பேரும், தார்வாரில் 9 பேரும், கதக்கில் 2 பேரும், ஹாசனில் 9 பேரும், ஹாவேரியில் 11 பேரும், கலபுரகியில் 4 பேரும், குடகில் 3 பேரும், கோலாரில் 4 பேரும், கொப்பலில் 4 பேரும், மண்டியாவில் 3 பேரும், மைசூருவில் 15 பேரும், ராய்ச்சூரில் இறப்பு இல்லை, ராமநகரில் 2 பேரும், சிவமொக்காவில் 10 பேரும், துமகூருவில் 6 பேரும், உடுப்பியில் 2 பேரும், உத்தரகன்னடாவில் 5 பேரும், விஜயாப்புராவில் 2 பேரும், யாதகிரியில் 2 பேரும் என மொத்தம் 179 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கர்நாடகத்தில் கொரோனா பரவல், வைரஸ் தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் வெகுவாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×