என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல் காந்தியின் பல கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது: சஞ்சய் ராவத்
Byமாலை மலர்9 Jun 2021 1:53 AM GMT (Updated: 9 Jun 2021 1:53 AM GMT)
ராகுல் காந்தி கூறிய பல விஷயங்கள் சரியாக இருப்பதால், அவரது வார்த்தைகளில் வலு உள்ளது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மும்பை :
பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி போடும் என அறிவித்தார். முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கொரோனா வைரஸ் கையாளும் முறை, தடுப்பூசி கொள்கையிலும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
பொது மக்களுக்கு அதிகளவில் தடுப்பூசி போட்டு இருந்தால், 2-வது அலையால் நாடு இந்தநிலைக்கு மோசமாகி இருக்காது எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்தநிலையில் ராகுல் காந்தியின் விமர்சனங்கள், கருத்துகள் சரியாக உள்ளதா என்பது குறித்து சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.யிடம் கேட்கப்பட்டது.
இதற்கு அவர் கூறியதாவது:-
ராகுல் காந்தி கூறிய பல விஷயங்கள் சரியாக இருந்து உள்ளன. சில அல்ல, அவரது பல கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. அவர் கொரோனா வைரஸ் அல்லது தடுப்பூசி குறித்து பேசியவை உண்மையாகி உள்ளன. அவரது வார்த்தைகளில் வலு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி போடும் என அறிவித்தார். முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கொரோனா வைரஸ் கையாளும் முறை, தடுப்பூசி கொள்கையிலும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
பொது மக்களுக்கு அதிகளவில் தடுப்பூசி போட்டு இருந்தால், 2-வது அலையால் நாடு இந்தநிலைக்கு மோசமாகி இருக்காது எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்தநிலையில் ராகுல் காந்தியின் விமர்சனங்கள், கருத்துகள் சரியாக உள்ளதா என்பது குறித்து சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.யிடம் கேட்கப்பட்டது.
இதற்கு அவர் கூறியதாவது:-
ராகுல் காந்தி கூறிய பல விஷயங்கள் சரியாக இருந்து உள்ளன. சில அல்ல, அவரது பல கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. அவர் கொரோனா வைரஸ் அல்லது தடுப்பூசி குறித்து பேசியவை உண்மையாகி உள்ளன. அவரது வார்த்தைகளில் வலு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X