search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை விபத்து
    X
    சாலை விபத்து

    உ.பி.யில் சோகம் - ஆட்டோ, பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் பலி

    உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கான்பூர்:

    உத்தர பிரதேசம் மாநிலத்தின் லக்னோ நகரில் இருந்து டெல்லி நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  

    இந்நிலையில், கான்பூர் நகரில் உள்ள சச்சேண்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்து, ஆட்டோ ஒன்றுடன் திடீரென மோதி விபத்திற்கு உள்ளானது.

    இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் காயமடைந்து உள்ளனர்.

    தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காயங்களுடன் போராடியவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×