search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    3 மாதங்களுக்கு பிறகு மகாராஷ்டிராவில் 10 ஆயிரமாக குறைந்த கொரோனா பாதிப்பு

    இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 470 ஆக அதிகரித்து உள்ளது. மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களில் 95.25 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர்.
    மும்பை :

    மகாராஷ்டிராவில் கடந்த ஏப்ரல் மாதம் 2-வது கொரானா அலை உச்சத்தில் இருந்தது. அதன்பிறகு அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளாால் மாநிலத்தில் பாதிப்பு குறையத்தொடங்கியது. இதையடுத்து தற்போது மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 10 ஆயிரத்து 219 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. 3 மாதங்களுக்கு பிறகு மாநிலத்தில் இந்தளவுக்கு பாதிப்பு குறைந்து உள்ளது. கடைசியாக கடந்த மார்ச் 9-ந் தேதி 9 ஆயிரத்து 927 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

    இதேபோல மாநிலத்தில் நோய் பாதிப்பில் இருந்து குணமானவர்களும் அதிகரித்து வருகின்றனர். நேற்று மட்டும் 21 ஆயிரத்து 81 பேர் குணமானார்கள். மாநிலத்தில் இதுவரை 58 லட்சத்து 42 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 55 லட்சத்து 64 ஆயிரத்து 348 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 74 ஆயிரத்து 320 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதேபோல மேலும் 154 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகினர். இதனால் இதுவரை
    கொரானாதொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 470 ஆக அதிகரித்து உள்ளது. மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களில் 95.25 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். இறப்பு விகிதம் 1.72 ஆக உள்ளது.
    Next Story
    ×