என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
28 மாநிலங்களில் 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு
Byமாலை மலர்7 Jun 2021 10:39 PM GMT (Updated: 7 Jun 2021 10:39 PM GMT)
இந்தியா, 141 நாட்களில் மொத்தம் 23 கோடி டோஸ் தடுப்பூசி போட்டுள்ளது. வேகமாக தடுப்பூசி போடுவதில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது.
புதுடெல்லி:
கொரோனா விவகாரம் தொடர்பான மந்திரிகள் குழுவின் உயர்மட்ட கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் பேசியதாவது:-
28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கருப்புபூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 28 ஆயிரத்து 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 86 சதவீதம் பேர் கொரோனாவால் தாக்கப்பட்டவர்கள். 62.3 சதவீதம் பேர் நீரிழிவு நோயாளிகள் ஆவர்.
அதிக அளவாக, மராட்டிய மாநிலத்தில் 6 ஆயிரத்து 339 பேரும், குஜராத்தில் 5 ஆயிரத்து 489 பேரும் கரும்பூஞ்சையால் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா, 141 நாட்களில் மொத்தம் 23 கோடி டோஸ் தடுப்பூசி போட்டுள்ளது. வேகமாக தடுப்பூசி போடுவதில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. உலக அளவில் மொத்தம் 88 கோடியே 70 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில், இந்தியாவில் மட்டும் 17 கோடியே 90 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது. இது, உலக அளவில் 20.2 சதவீதமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கொரோனா விவகாரம் தொடர்பான மந்திரிகள் குழுவின் உயர்மட்ட கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் பேசியதாவது:-
28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கருப்புபூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 28 ஆயிரத்து 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 86 சதவீதம் பேர் கொரோனாவால் தாக்கப்பட்டவர்கள். 62.3 சதவீதம் பேர் நீரிழிவு நோயாளிகள் ஆவர்.
அதிக அளவாக, மராட்டிய மாநிலத்தில் 6 ஆயிரத்து 339 பேரும், குஜராத்தில் 5 ஆயிரத்து 489 பேரும் கரும்பூஞ்சையால் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா, 141 நாட்களில் மொத்தம் 23 கோடி டோஸ் தடுப்பூசி போட்டுள்ளது. வேகமாக தடுப்பூசி போடுவதில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. உலக அளவில் மொத்தம் 88 கோடியே 70 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில், இந்தியாவில் மட்டும் 17 கோடியே 90 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது. இது, உலக அளவில் 20.2 சதவீதமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X