என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து
Byமாலை மலர்7 Jun 2021 11:29 AM GMT (Updated: 7 Jun 2021 11:29 AM GMT)
பொதுத்தேர்வை நடத்துவதா? வேண்டாமா ? என்பது குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மேற்கு வங்காள அரசு அறிவித்திருந்தது.
கொல்கத்தா:
கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தது.
இதையடுத்து மாநில பாடத்திட்டங்களின் கீழ் படிக்கும் மாணவர்களின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதா, நடத்துவதா என்பது குறித்து பல்வேறு மாநிலங்களும் ஆலோசித்து முடிவுகளை அறிவித்துவருகின்றன.
உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளன.
இந்த நிலையில், மேற்கு வங்காளத்திலும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி இன்று அறிவித்துள்ளார்.
தேர்வு நடத்துவதா? வேண்டாமா ? என்பது குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மேற்கு வங்காள அரசு அறிவித்திருந்தது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிந்த நிலையில், தேர்வை ரத்து செய்து மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X