என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கு அவங்களுக்கு மட்டும் தான் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறி வைரலாகும் தகவல்
Byமாலை மலர்7 Jun 2021 5:27 AM GMT (Updated: 7 Jun 2021 5:27 AM GMT)
கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று மக்களை வாட்டிவதைக்கிறது. நாடு முழுக்க மருத்துவமனை மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக பெரும் சிக்கலான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை சமூக வலைதள சர்ச்சையில் சிக்கியுள்ளது.
திரினாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் கொல்கத்தா மேயர் இணைந்து புதுப்பிக்கப்பட்ட மருத்துவமனை ஒன்றை திறந்து வைக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில் புது மருத்துவமனையில் முஸ்லீம் மதத்தினருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், புதுப்பிக்கப்பட்ட மருத்துவமனை 1926 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. எனினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த மருத்துவமனை பயன்பாடற்ற நிலையில், மூடப்பட்டு இருந்தது. சமீபத்தில், இந்த மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்காக புதுப்பிக்கப்பட்டது. இதில் மதம் மற்றும் சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்ட மருத்துவமனை மே 30 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதில் ஐசியு வசதி, படுக்கை வசதி உள்ளிட்டவை உள்ளது. இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்த மருத்துவமனையும் செயல்படும் என இதனை திறந்து வைத்த திரினாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் கொல்கத்தா மேயர் தங்களின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
அந்த வகையில் கொல்கத்தாவில் திறக்கப்பட்டுள்ள புது மருத்துவமனையில் முஸ்லீம் மதத்தினருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என கூறி வைரலான தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X