search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கர்நாடகத்தில் புதிதாக 12,209 பேருக்கு கொரோனா பாதிப்பு: 320 பேர் பலி

    கர்நாடகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து வருகிறது. ஆனால் கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 58 ஆயிரத்து 274 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 12,209 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 95 ஆயிரத்து 523 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 320 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 580 ஆக உயர்ந்துள்ளது.

    ஒரே நாளில் 25,659 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 9 ஆயிரத்து 417 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 54 ஆயிரத்து 505 ஆக குறைந்துள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 2,944 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பாகல்கோட்டையில் 166 பேர், பல்லாரியில் 285 பேர், பெலகாவியில் 418 பேர், பெங்களூரு புறநகரில் 277 பேர், பீதரில் 7 பேர், சாம்ராஜ்நகரில் 247 பேர், சிக்பள்ளாப்பூரில் 348 பேர், சிக்கமகளூருவில் 416 பேர், சித்ரதுர்காவில் 266 பேர், தட்சிண கன்னடாவில் 609 பேர், தாவணகெரேயில் 143 பேர், தார்வாரில் 262 பேர், கதக்கில் 133 பேர், ஹாசனில் 655 பேர், ஹாவேரியில் 138 பேர், கலபுரகியில் 60 பேர், குடகில் 162 பேர், கோலாரில் 257 பேர், கொப்பலில் 212 பேர், மண்டியாவில் 571 பேர், மைசூருவில் 1,237 பேர், ராய்ச்சூரில் 104 பேர், ராமநகரில் 60 பேர், சிவமொக்காவில் 456 பேர், துமகூருவில் 698 பேர், உடுப்பியில் 494 பேர், உத்தரகன்னடாவில் 360 பேர், விஜயாப்புராவில் 190 பேர், யாதகிரியில் 34 பேருக்கு
    கொரோனா
    பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 187 பேரும், பல்லாரியில் 6 பேரும், பெலகாவியில் 15 பேரும், பெங்களூரு புறநகரில் 2 பேரும், சாம்ராஜ்நகரில் 6 பேரும், சிக்பள்ளாப்பூரில் ஒருவரும், சிக்கமகளூருவில் 5 பேரும், சித்ரதுர்காவில் ஒருவரும், தட்சிண கன்னடாவில் 5 பேரும், தாவணகெரேயில் 6 பேரும், தார்வாரில் 9 பேரும், கதக்கில் 4 பேரும், ஹாசனில் 8 பேரும், ஹாவேரியில் 6 பேரும், கலபுரகியில் ஒருவரும், குடகில் 4 பேரும், கோலாரில் 8 பேரும், கொப்பலில் ஒருவரும், மைசூருவில் 19 பேரும், ராய்ச்சூரில் 2 பேரும், சிவமொக்காவில் 6 பேரும், துமகூருவில் 6 பேரும், உடுப்பியில் 2 பேரும், உத்தரகன்னடாவில் 6 பேரும், விஜயாப்புராவில் 4 பேரும் என மொத்தம் 320 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கர்நாடகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து வருகிறது. ஆனால் கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×