search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தடுப்பூசி போட்டும் கொரோனா வந்தால் உயிரிழப்பு அபாயம் இல்லை - எய்ம்ஸ் ஆஸ்பத்திரி ஆய்வு முடிவு

    இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தின்கீழ் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
    புதுடெல்லி:

    தடுப்பூசி போட்டும் கொரோனா வந்தால், உயிரிழப்பு நேராது என்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தின்கீழ் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

    இந்த 2 தடுப்பூசிகளில் எதை ஒருவர் போட்டுக்கொண்டாலும், முதல் டோஸ் போட்டு குறிப்பிட்ட இடைவெளியில் அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்வது முக்கியம்.

    ஆனால் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் கூட கொரோனா தொற்று பாதித்து இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெனிவந்தன.

    தடுப்பூசி போட்டும், கொரோனா வந்தாலும் அவர்களுக்கு உயிரிழப்பு போன்ற ஆபத்து நேர்வதில்லை என்று தெரிய வந்துள்ளது.

    எய்ம்ஸ்


    இது குறித்த ஆய்வை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நடத்தி உள்ளது.

    அதுபற்றிய விவரம் வருமாறு:-

    2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா வந்த 36 நோயாளிகளும், ஒரு டோஸ் போட்டு தொற்று பாதிப்புக்குள்ளான 27 பேரும் என 63 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

    இவர்களில் 10 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். எஞ்சியவர்கள் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.

    இவர்கள் 21 முதல் 92 வயது வரையிலானவர்கள். 41 பேர் ஆண்கள். 22 பேர் பெண்கள். இவர்களில் யாருமே நீரிழிவு, உயர் ரத்த அழுத்த அழுத்தம் உள்ளிட்ட இணைநோய் இல்லாதவர்கள்.

    இவர்களது ஆய்வு முடிவு குறித்து அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தடுப்பூசி போடப்பட்ட நிலையிலும், அதைப் பொருட்படுத்தாமல் அனைத்து நோயாளிகளுக்கும் பரிசோதனையின்போது வைரஸ் அளவு அதிகமாக இருந்தது. காய்ச்சலும் இருந்தது. இந்த காய்ச்சல் 5 முதல் 7 நாட்கள் வரை இருந்தது. இது தடுப்பூசி போடாமல் கொரோனா பாதித்தவர்களைப் போன்றே இருந்தது.

    நோயாளிகளின் உடலில் தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி இருந்தாலும், தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற நோயாளிகளைப்போலவே ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் யாருக்கும் மரணம் நேரவில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×