என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடர்ந்து 8-வது மாதமாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது - மத்திய அரசு தகவல்
Byமாலை மலர்5 Jun 2021 7:13 PM GMT (Updated: 5 Jun 2021 7:20 PM GMT)
தொடர்ந்து 8 மாதங்களாக மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்திருக்கிறது. அதேநேரம் சிறு வணிகர்கள் ஜி.எஸ்.டி. தாக்கலுக்காக இந்த மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் வசூலிக்கப்பட்டு வரும் ஜி.எஸ்.டி தொகையை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் கடந்த மாத மொத்த வசூல் குறித்த தகவல்களை நேற்று வெளியிட்டது.
அதன்படி ரூ.1.02 லட்சம் கோடி (ரூ.1,02,709 கோடி) கடந்த மாதம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.17,592 கோடியும், மாநிலஜி.எஸ்.டி.ரூ.22,653 கோடியும் அடங்கும்.
இதன் மூலம் தொடர்ந்து 8 மாதங்களாக மொத்தஜி.எஸ்.டி.வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்திருக்கிறது. அதேநேரம் சிறு வணிகர்கள் ஜி.எஸ்.டி. தாக்கலுக்காக இந்த மாதம் முதல் வாரம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. எனவே இந்த தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாதத்தில் ரூ.1.02 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டு இருந்தாலும், கடந்த ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் இது 27 சதவீதம் குறைவாகும். இதன் மூலம் கொரோனாவின் 2-வது அலை ஜி.எஸ்.டி.யில் லேசான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெளிவாகி இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
எனினும் கடந்த ஆண்டு மே மாத வசூலை ஒப்பிடுகையில் இது 65 சதவீதம் அதிகம் ஆகும். கொரோனா 2-வது அலையால் மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தி பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்த போதும், மொத்த ஜி.எஸ்.டி.வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்திருப்பது கவனிக்கத்தக்கது.
நாடு முழுவதும் வசூலிக்கப்பட்டு வரும் ஜி.எஸ்.டி தொகையை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் கடந்த மாத மொத்த வசூல் குறித்த தகவல்களை நேற்று வெளியிட்டது.
அதன்படி ரூ.1.02 லட்சம் கோடி (ரூ.1,02,709 கோடி) கடந்த மாதம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.17,592 கோடியும், மாநிலஜி.எஸ்.டி.ரூ.22,653 கோடியும் அடங்கும்.
இதன் மூலம் தொடர்ந்து 8 மாதங்களாக மொத்தஜி.எஸ்.டி.வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்திருக்கிறது. அதேநேரம் சிறு வணிகர்கள் ஜி.எஸ்.டி. தாக்கலுக்காக இந்த மாதம் முதல் வாரம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. எனவே இந்த தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் கடந்த ஆண்டு மே மாத வசூலை ஒப்பிடுகையில் இது 65 சதவீதம் அதிகம் ஆகும். கொரோனா 2-வது அலையால் மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தி பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்த போதும், மொத்த ஜி.எஸ்.டி.வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்திருப்பது கவனிக்கத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X