என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மம்தாவின் உறவினர் அபிஷேக் பானர்ஜிக்கு கட்சியில் முக்கிய பதவி
Byமாலை மலர்5 Jun 2021 1:59 PM GMT (Updated: 5 Jun 2021 1:59 PM GMT)
திரிணாமுல் காங்கிரசின் இளைஞர் அணி தலைவராக நடிகை சாயோனி கோஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியமைத்தது. அக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி முதல் மந்திரியாக பதவியேற்றார். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைப்புக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், கட்சியின் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்படி, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி நியமிக்கப்பட்டு உள்ளார். தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியமைக்காக அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர் அணி தலைவராக நடிகை சாயோனி கோஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். கலாச்சார பிரிவு தலைவராக முன்னாள் திரைப்பட இயக்குனர் ராஜ் சக்ரபோர்த்தி நியமிக்கப்பட்டார்.
இதேபோன்று திரிணாமுல் காங்கிரசின் மாநில பொது செயலாளராக குணால் கோஷ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். விவசாய அணி தலைவராக பழம்பெரும் தலைவர் புர்னேந்து போஸ் நியமிக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X